செவ்வாய், 20 நவம்பர், 2018

சமத்துவம் கொண்டாடுதே!.

வானவில்லே!

மழைதுளி வண்ணம்

தந்து நீ நின்றாயா!...

வான் கொண்ட

மேகங்கள் கொண்டாடுதே!

சிலநொடி நீ வந்து

நின்றவுடன்

மயில் கொண்ட

தோகைகள் விரிந்து ஆடுதே!

அந்த வானமும்

இந்த பூமியும்

நீலுதே நீலுதே!

சமத்துவம் கொண்டாடுதே!

சமமாய் நின்றாடுதே!...

வான் நிற்க

பூமி உருண்டோட

மேகம் சுழ

மாரியும் புயலும்

மாறி மாறி

நீலுதே நீலுதே!...

 இங்கு மக்களின் 

கண்ணீருக்கு பஞ்சமில்லை

உறையிடம் எஞ்சியில்லை

பசிக்கு சோறுமில்லை

சுவாசிக்க உயிரும் இல்லை

கண்ணீரும் கடல்நீரும்

ஒன்றாய் நின்று

சமத்துவம் கொண்டாடுதே!.

சாதி சமயத்தை வென்று ஆடுதே!...

 

 

                       

சனி, 14 ஜூலை, 2018

யார் தந்த சாபம்!

யார் தந்த சாபம்!

 

பஞ்சமில்லா வளங்களே!

இன்று நீங்கள் அழிவது

யார் தந்த சாபமோ?

பச்சைநிற வயல்கலெல்லாம்

வறண்டு கிடப்பது

நிலத்திற்கு வந்த சாபமா?

இல்லை பசுமையின்

மேல் வந்த கோபமா?

குளமும் ஆறும் காய்ந்து

திடலாய் மாறுவது

இனிவரும் தலைமுறைக்கு

வந்த கேடா?

இல்லை சிலதலைமுறை

பாதுகாக்க மறந்ததன்

அபாய கோடா?

காற்றாட உண்டகாலம் போய்

இன்று காற்றை

சுவாசிக்க முடியாத காலம்

வந்துவிட்டதே....

காய்த்துகுலுங்கும் மரங்கள் எல்லாம்

வெட்டி சாய்த்து கிடப்பதால்

மழை இல்லாமல் தவிக்கும்

வானம் பார்த்த பூமி

இன்று செத்து மடியுதே

விவசாயம் என்னும் சாமி...

மண் திருட்டால்

மண்வளம் சுறண்டப்பட்டு

பேரழிவு எழுகிறதே...

இது யார் தந்த சாபமோ?

விளைநிலங்களை அழித்து

தொழிற்சாலை அமைக்கும்

அறியாமை அழிய

இனியாவது எழுவோம்...

இயற்கை தந்த பல

வளங்களை காப்போம்

அதற்கிட்ட சாபத்தை அழிப்போம்....